Monday, July 11, 2011

அவள் தோழியான கதை


முதன் முதலாக என்னைப் பார்த்தபோது
வெட்கப்பட்டு கீழே குனிந்து
சிறு புன்னகை வீசிச் செல்லாமல்
ஹாய் சொல்லி என்னைப் பற்றிய
விபரங்களைக் கேட்டறிந்ததனால்...
என்னிடம் நூறுரூபாய் வாங்கிகொண்டு
இத்தனாந்தேதி திருப்பித் தந்துவிடுவேன்
என்று சொல்லாமல் சென்றதனால்....
என் சட்டையில் வியர்வைவாசம்
வீசும்போது முகம் சுளிக்காமல் கூந்தல்
மல்லிகை பறித்து சட்டைப்பைக்குள் போட்ட்தனால்...
இருவரும் பேசிக் கொண்டிருக்கும்
போது அப்பா வந்தவுடன் பிரிந்தோடி
மறையாமல்அவரிடம்
என்னை அறிமுகப்படுத்தியாதனால்..
உன்னிடம் ஒன்று சொல்லவேண்டுமென்று
அடிக்கடி சொல்லிக்கொண்டு இதுவரை
சோல்லாமல் இழுத்துக் கடத்தியதனால்....
அவள் என் தோழியானால்...
அவளுடைய நினைவுகளை
மனதிலேயே வைத்துக்கொள்ளாமல்
உங்களுடன் பகிர்ந்து கொள்வதனால்
நான் உங்கள் தோழனாகிறென்....
நட்புடன்
சி ஐ ரமேஸ்.........

No comments:

Post a Comment