Tuesday, February 22, 2011
விடுப்புக்கொடு
உலக அழகியல்லடீ நீ...
என்னை எவ்வளவுதான் வெலுத்துகொண்டாலும்
அழகு பொருட்க்களை தின்று தீர்த்தாலும்
அப்பொருள்களுக்கு என்னைத் தின்னக்குடுத்தாலும்
உன் பார்வை என்மேல் படாதடி.....
தினந்தோரும் உன் வீட்டில் உன் பிம்பத்தை
உணக்கு பிரதிபலிக்கும் அந்தக் கண்னாடிக்கு
விடுப்புக்கொடு ஒருநாள் ...
அந்நாள் உலகமே உனக்கு அழகாகத்
தெரியும்,,,
ஏன் என்றால்?
உலக அழகியல்லடீ நீ...
அதைவிட அழகி....
புலம்பல்
ஓட்டமும் நடையும் உன் அசைவுகளை
கவிதையாக்குவேன்....
பார்த்து தொடரும் உன் பாதச்சுவடை
படிகள்ளாக்குவேன்....
எரிமலையின் சீற்றந்தன்னை உன் இதழ்ழடியில்
ஒலிக்க கான்பேன்....
பட்டாம்பூச்சியின் படபடபை உன் கண் இமையில்
கண்டு கொல்வேன்......
கற்பனையின் எல்லை செல்வேன் காரனம்
நீ என்பேன்.....
கன்னே நீ இருந்த போதும்
எட்டி நின்றேன்.....
நீ பறந்தபோதும் நான்
பார்த்தே நின்றேன்.....
உனர்ந்தேன் அடி பாவம்மடி
நீ....
ஒவ்வொரு நாளும் என்னை பார்த்தவள்
அல்லவா நீ....
அடி போடி பைத்தியகாரி
உன் அருமை தெரியாதவள்...
இப்படியானது என் புலம்பலின்
மொழிபெயர்ப்பு......
Wednesday, February 16, 2011
தவிப்பு....
நுங்கு வண்டி
மூணுகண்ணு நொங்கெடுத்து
நொச்சிக்குச்சி அச்சுபோட்டு
கருவேலங் கவகொடுத்து
தள்ள தள்ள போகும்பாரு,
எங்க ஊரு சீமையில
திருவாரு தேருபோல
பள்ளம் மேடு காடெல்லாம்
உருண்டு போகும் நுங்கு வண்டி!!
நடந்து பழகுன நாள்மொதலா
நா ஓட்டின மொதவண்டி
வண்டி ஓட்டி ஓட்டியே
நட பழகினது நாந்தானே;
வயக்காடு வரப்புவழி
வல்லம் பாற, வால் பாற
எல்லா ஊரும் சுத்திச்சுத்தி
வண்டியில போய் வருவன்!
வருசம் இருவது ஓடிருச்சு,
கட்டிடங்க பெருத்திருச்சு
வண்டி ஓட்டின தடத்துல
காரும் பஸ்சும் வந்தாச்சு
வயலு வரப்பு போயிருச்சு
வாழத்தோப்பு வயக்காடு
தென்னந்தோப்பு பனங்காடு
போனஎடமும் தெரியல
காருலவந்து எறங்கினாலும்
காரோட தார தெரியல
நொங்கு வண்டி போனதடம்
நென்சுக்குள்ள பதிசுருச்சு;
இனி யொரு தடவ அது போல
நொங்குவ்ண்டி தள்ளிக்கிட்டு
எங்கூரு வரப்பெல்லாம்
ஓட்டணும்னு ஏங்குது!
Monday, February 14, 2011
பழக்கம்
என் வலைப்பூவே...
எதிர் வீட்டில் உருளும் பாத்திர கீதம்
தினந்தோறும் என் சுப்பரபாதம்....
ஆண்டீ! தண்ணிர் வந்தாச்சு என்ற கூவல்
குளிக்கச் சொல்லி எனக்கு எச்சரிக்கை,
விழி அசைவில் வழி அனுப்புதலுடன்
கோலம் போடும் பனி....
தானாகவே எழுந்து கிளம்புகிறான்
உன்னிடம் பெருமை கொள்ளும் என் தாய்...
தான்தான் காரனம் என்று சொல்லமுடியாமல்
அசடு வ்ழியும் உன் முகம்,
சொல்ல முடியாத தவிப்புகளுக்குள்
தினந்தோறும் நிகழ்வுகள்,
ஓ என் வலைதளமே.....
என் ஆசைகளை உன்னிடமே
கொட்டுகிறேன் .....
உன் முகம் பார்த்து வாசிப்பாள்
ஒரு நாள் ....
அந்நாளில் சொல்லிவிடு என்
காதலை.....
Subscribe to:
Posts (Atom)