Wednesday, August 25, 2010

ஒரு புன்னகை



பாலைவனத்தின் வழியாக
பயனப்படும் மழைமேகமாய்!
ஒவ்வொரு முறையும்
கொள்ளையடித்துப்போனவள்!!
முதல் தவனையாக
திருப்பித்தந்தாள்
ஒரு புன்னகையை!!!  

அறிவது யார்?

எரிபடும் ஈழமக்கள் உயிர்வழி என்னவென்று
உனை நீயே சோதித்துக்கொண்டாயோ?
காவியத்தில் இல்லாத நல்லதொரு காதலென்று
கள்ளக்காதலுக்கு மறைவிடம் கொடுத்த தற்க்கு
உன்னை மரித்துக்கொண்டாயோ?
சாதிச் சாக்கடைக்குள்  குடியிருக்கும் தலைவர்களே!
சிந்தித்ததும் பற்றியதோ உன் மேணி?
தன் குடியில் தானே எரிவதும் இல்லாமல்,
குடும்பத்தின் வயிறு எரித்தது போதாதென்று,
புகைத்த நெருப்பை உன் மேல் எறிநதானோ?
எரிந்து கரியும் என் வழித்தட மரமே!
உன்னைக் கடக்கும் போதெல்லாம்
இந்த வழிப்போக்கனின் வார்த்தகள் இதுதானே,
உன்மை காரணம் அறிவது யார்?