
எதிர் வீட்டில் உருளும் பாத்திர கீதம்
தினந்தோறும் என் சுப்பரபாதம்....
ஆண்டீ! தண்ணிர் வந்தாச்சு என்ற கூவல்
குளிக்கச் சொல்லி எனக்கு எச்சரிக்கை,
விழி அசைவில் வழி அனுப்புதலுடன்
கோலம் போடும் பனி....
தானாகவே எழுந்து கிளம்புகிறான்
உன்னிடம் பெருமை கொள்ளும் என் தாய்...
தான்தான் காரனம் என்று சொல்லமுடியாமல்
அசடு வ்ழியும் உன் முகம்,
சொல்ல முடியாத தவிப்புகளுக்குள்
தினந்தோறும் நிகழ்வுகள்,
ஓ என் வலைதளமே.....
என் ஆசைகளை உன்னிடமே
கொட்டுகிறேன் .....
உன் முகம் பார்த்து வாசிப்பாள்
ஒரு நாள் ....
அந்நாளில் சொல்லிவிடு என்
காதலை.....
No comments:
Post a Comment